தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை
சென்னை:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றுசென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழைபெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மானாமதுரை, மணிமுத்தாறு, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் 60 மி.மீ மழையும், பூதப்பாண்டி, தாம்பரம் ஆகியஇடங்களில் 40 மி.மீ. மழையும், பொன்னேரி, செங்குன்றம் ஆகிய இடங்களில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதற்கிடையே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்குஇடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு:
இதற்கிடையே வறட்சி நிலை குறித்து அறிய மத்திய உணவு, விவசாயத் துறை செயலாளர் அகர்வால் தலைமையில்தமிழகம் வந்திருக்கும் மத்திய நிபுணர் குழு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளை கொட்டும்மழையில் பார்வையிட்டது.
அப்போது விவசாயக் கடனை ரத்து செய்யுமாறு விவசாயிகள் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications