Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணா நீர்: ஜெ. நாளை ஹைதராபாத் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளை ஏற்று சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிக்க ஆந்திரமுதல்வர் ராஜசேகர ரெட்டி சம்மதித்துள்ள நிலையில், இதே கோரிக்கை தொடர்பாக அவரை சந்திக்க முதல்வர்ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார்.

ஆந்திராவில் ரூ.144 கோடி செலவில் அமைக்கப்பட்ட 17 கி.மீ. தூர நெல்லூர் நான்கு வழி புறவழிச் சாலையைமத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு திறந்துவைத்தார் .இந்த விழாவில் ராஜசேகர ரெட்டியும் கலந்து கொண்டார்.

விழாவில் டி.ஆர்.பாலு பேசியதாவது:

ஆந்திராவில் சாலை வசதியை மேம்படுத்துவது பற்றி ராஜசேகர ரெட்டியுடன் ஆலோசனை நடத்துவதற்காக மட்டும்நான் இங்கு வரவில்லை. குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்படும் சென்னை மக்களுக்கு தெலுங்கு கங்கை கால்வாய்மூலம் உடனே தண்ணீர் திறந்து விடும்படி திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுக்கச் சொன்னார்.

அதை ஏற்றுத்தான் நான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை நகருக்கு உடனே தெலுங்கு கங்கை கால்வாய்மூலம் தண்ணீர் திறந்து விடும்படி ராஜசேகர ரெட்டிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதையடுத்துப் பேசயி ராஜசேகர ரெட்டி கூறியதாவது:-

ஆந்திராவில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதியைத் தந்து, திட்டத்தை விரைவாகநிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு நன்றி. திமுக தலைவர் கருணாநிதி,டி.ஆர். பாலு மற்றும் திமுகவுக்கு மட்டும் தலைவர் அல்ல. கருணாநிதி எனக்கும் தலைவர் தான்.

அவரது கடும் உழைப்பால்தான் இன்று மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்தின் மூலம் சென்னை நகருக்கு கிருஷ்ணா நீர்போய் சேரும். இத் தகவலை கருணாநிதியிடம் தெரிவிக்கும்படி டி.ஆர். பாலுவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஜெ. ஹைதராபாத் பயணம்:

கிருஷ்ணா நீர் தர ராஜசேகர ரெட்டி உறுதி கூறியுள்ள நிலையில், இதே கோரிக்கை தொடர்பாக அவரை சந்திக்கஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார்.

நாளை மறுநாள் ராஜசேகர ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாக கோரிக்கை விடுக்கிறார்.

நக்ஸலைட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜசேகர ரெட்டிமுன்வந்ததை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார். அதன்பின் ஜெயலலிதா ஹைதராபாத் செல்வதைத் தவிர்த்தேவந்தார். அங்கு அவருக்கு ஒரு திராட்சை தோட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்டிக்கு கருணாநிதி நன்றி:

இந் நிலையில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்படும் என பகிரங்கமாக அறிவித்தஉங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+