மருத்துமனையில் சசி சகோதரர்: ஜெ. நலம் விசாரிப்பு
சென்னை:
உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தோழிசசிகலாவின் சகோதரரை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை ஜெயலலிதா நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின்கணவரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பாலகிருஷ்ணனையும் சந்தித்து ஜெயலலிதா நலம் விசாரித்தார்.
ஜெ.-வாணிஸ்ரீ சந்திப்பு:
இதனையடுத்த கோட்டை சென்ற ஜெயலலிதாவை, பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தனது குடும்பத்தினருடன்சந்தித்தார்.
சிவாஜி கணேசன், சிவக்குமார், ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் வாணிஸ்ரீ.இவர் தற்போது அதிகம் நடிப்பதில்லை.
இந் நிலையில் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வாணி ஸ்ரீ சந்தித்துப்பேசினார். சந்திப்பின்போது, வாணிஸ்ரீயின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.