காந்தி ஜெயந்தி: சென்னையில் கொண்டாடும் கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை சென்னையில் பள்ளிமாணவர்களுடன் கொண்டாடுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றது முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர்களை சந்தித்துவருவதை வழக்கமாக்கியுள்ளார் அப்துல் கலாம்.
அக்டோபர் 2ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வரும் அப்துல் கலாம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம்ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மாணவர்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கிறார். இந்த நிகழ்ச்சியில் 8,000 மாணவ,மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.
மாணவர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் முகப்பேரில் உள்ள டாக்டர்கே.எம்.செரியன் இருதய மருத்துவமனையில் புதிய வசதியைத் தொடங்கி வைக்கிறார்.
இந் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று இரவே அவர் டெல்லி திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications