கும்பகோணம் தீ விபத்து: 3 பேருக்கு ஜாமீன்
மதுரை:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து கைது செய்யப்பட்ட, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை ஜாமீனில் விடுவித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாகக் கைதாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த கல்வித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் 10 பேர் கடந்தவாரம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி மற்றும் சத்துணவுஉதவியாளர் வசந்தி ஆகியோர் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜன்,
வழக்குப் பதிவு செய்யப்பட்டு 60 நாள் ஆன பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இவர்கள் மூவரும்தலா ரூ.5,000 வீதம் இருநபர் ஜாமீனில் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications