விழாவில் பங்கேற்க அனுமதி கோரி நெடுமாறன் மனு
சென்னை:
மதுரையில் நடைபெறும் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனின் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்ற அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மனு செய்துள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடிய பழ. நெடுமாறன்சென்னை உயர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பொதுக் கூட்டங்களில் உரை நிகழ்த்தக் கூடாது என்ற நிபந்தனையும் அதில் ஒன்று. சமீபத்தில் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் உயர் நீதிமன்ற அனுமதியுடன் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந் நிலையில் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவருகிற சனிக்கிழமை மதுரையில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்ற அனுமதிக்கக் கோரி பழ. நெடுமாறன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நிடைபெறுகிறது.