ஆண்டிப்பட்டி: கடன் சுமையால் குடும்பமே தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தேனி:

கடன் தொல்லை காரணமாக ஆண்டிப்பட்டி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அழகாபுரி என்ற ஊரில் வசிப்பவர் ஏசையா (49). இவரதுமனைவி மணிமேகலை (39). இந்தத் தம்பதியினருக்கு ரெஜினா (14), ஜான்சிராணி ( 11) என்ற இரு குழந்தைகள்.

குடும்பச் சுமை காரணமாக ஏசையா நிறைய கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் அவரைநெருக்கியதாகவும் கூறப்படுகிறது. இந் நிலையில் ஏசையாவும், அவரது மனைவியும் விஷ மாத்திரைகளைஉணவில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, தாங்களும் சாப்பிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகளும் மரணமடைந்தன. மணிமேகலை, ஆண்டிபட்டி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். தற்போது உயிருக்கு ஆபத்தானநிலையில் ஏசையா பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடன் தொல்லை காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்திருப்பது ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+