திருச்சியில் 40 ஆண்டு பழமையான நூலகம் இடிப்பு
திருச்சி:
திருச்சியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த திமுகவின் அண்ணா படிப்பகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத்தள்ளினர்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த தலைவரான அன்பில் தர்மலிங்கத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் அண்ணா படிப்பகம்என்ற பெயரில் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் இங்குள்ளன.
இந் நிலையில் அண்ணா படிப்பகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறிமாநகராட்சி அதிகாரிகள் பலமுறை படிப்பகத்தை இடிக்க முயன்று வந்தனர். ஆனாலும் திமுகவினர் மற்றும்பொதுமக்கள் எதிர்ப்பால் படிப்பகம் இடிக்கப்படாமல் தப்பியது.
இந் நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாரின் துணையுடன் படிப்பகத்தை இடித்துத் தள்ளினர்.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு மாநகராட்சி அதிகரிாகளைமுற்றுகையிட்டனர்.
அதிகாகளுடன் கடும் வாக்குவாதம் செய்தும் பலனில்லாமல் போகவே, நூலகத்தில் இருந்த நூல்களை பாதுகாப்பாகஎடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications