அரசுக்கு ராமதாஸ், வாசன் கண்டனம்
சென்னை:
தேர்தல் வன்முறைக்கு அதிமுகதான் காரணம் என்று பாமகவும் காங்கிரசும் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கெல்லாம் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டதோ, அங்கெல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.ஆளுங்கட்சியின் அராஜகம் தலை தூக்கிய இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. உயர் நீதிமன்றம்கண்டனம் தெரிவித்திருப்பது போல், சென்னையில் நடந்தது உண்மையான தேர்தல் அல்ல.
அதிமுகவினர் இஷ்டம் போல் நடத்தப்பட்ட தேர்தல் அது. பிரதான கட்சி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளைவிட செல்லாத வாக்குகள் அதிகம் என்ற விநோதம் நடந்திருப்பது இங்குதான். மக்களவைத் தேர்தல் தோல்வியைமறைக்க அராஜகமான முறையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்றுகூறியுள்ளார்.
வாசன் அறிக்கை:
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில்,
உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவின் அராஜகப் போக்கு தலைவிரித்தாடியுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல்ஆணையம் தனது பணியை முழுமையாக செய்யத் தவறிவிட்டது. ஆளுங்கட்சியினரின் வன்முறைக்கு காவல்துறைதுணை போயிருப்பது வெட்கக்கேடானது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த இடைத் தேர்தலாக இருந்தாலும் நேர்மையாக நடைபெற வாய்ப்பே இல்லைஎன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னை 7வது வார்டில் நடந்த இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டு,மறுதேர்தல் நடத்தும்படி தமிழக தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications