கூடங்குளம்: ஊழியர் தேர்வுக்கு நீதிமன்றம் தடை
மதுரை:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கடை நிலை ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கூடங்குளம் நிலப் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பின் செயலாளரான ராஜாராம் என்பவர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்களது கவுன்சிலைச் சேர்ந்த உறுப்பினர்கள், கூடங்குளம்அனு மின் நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வழங்கியுள்ளனர்.
அரசு நிர்ணயித்த மிகக் குறைந்த விலைக்கு இந்த நிலங்களை நில உரிமையாளர்கள் கொடுத்துள்ளனர். நிலங்களைக்கொடுத்தவர்களுக்கு, கூடங்குளம் அணு மின் நிலைய வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என அரசுதெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது கடை நிலை வேலைகளுக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கூடங்குளம் அணு மின் நிலையநிர்வாகம் தேர்வு செய்து வருகிறது. இது சட்டவிரோதமான செயல்.
தகுதி வாய்ந்த நில உரிமையாளர்களுக்கே கடை நிலை வேலையில் முன்னுரிமை கொடுத்து சேர்க்க வேண்டும்என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கடை நிலை ஊழியர் தேர்வுக்குஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications