முன்னாள் பிஜி பிரதமருக்கு இந்திய விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ப்ரவசி பாரதீய சம்மன் விருது பிஜிநாட்டின் முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரிக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் பெருமையை உலக நாடுகளில் உயர்த்துகின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாகபணியாற்றிய வெளிநாட்டு வாழ் இந்தியர்களைக் கெளரவப்படுத்த இந்தியா அரசு, பாரதீய சம்மன் என்ற விருதைஆண்டுதோறும் வழங்குகிறது.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறைஅமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் விருதுகளை வழங்கினார்.
மகேந்திர செளத்ரி தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தாலும் விழாவுக்கு வரவில்லை. இதனால்விருதை அவர் நேரடியாகப் பெறவில்லை.












Click it and Unblock the Notifications