நுழைவுத் தேர்வே கூடாது: ராமதாஸ்
சென்னை:
மருத்துவம், என்ஜினியரிங் கல்விகளில் சேர கிராமப் புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் தடையாகஉள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இந்திய சமுதாயக் கல்வி என்ற புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்திருப்பதாகசென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கூறியுள்ளார். இத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மதிப்பெண்வரம்பு எதுவும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு மட்டுமல்ல, எந்தக் கல்விக்குமே குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பே கூடாது. பொதுத் தேர்வில் தேர்ச்சிஎன்பது மட்டுமே போதும். அத்துடன் நுழைவுத் தேர்வு என்பதும் கூடாது.
நுழைவுத் தேர்வு என்பதே கிராமப்புற மாணவர்களை உயர் கல்வியில், குறிப்பாக மருத்துவம், என்ஜினியரிங்போன்ற தொழில் கல்வியில் நுழைய விடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான்.
எனவே, புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முன் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களுடனும்கல்வியாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications