For Daily Alerts
Just In
தமிழில் பெயர் பலகைகள்: ஜெ. புதிய உத்தரவு
சென்னை:
தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், கடைகள், விற்பனை நிலையங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடைகள், வியாபார நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று கடந்த 1983, 84ம் ஆண்டுகளில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பிறமொழிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழிலும், அடுத்து ஆங்கிலத்திலும், அதன் பிறகு வேறுமொழிகளிலும் பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும்.
இதை உறுதி செய்ய நடவடிககை எடுக்குமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர்அலுவலகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 20, 2004, 5:30 [IST]