சபரிமலையில் பிச்சை எடுக்க தடை
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலை சீசன் நெருங்குவதையொட்டி சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் துவங்க உள்ளதை அடுத்து பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. சுகாதாரம்,கழிப்பிடம், மலைப்பாதையின் இருமருங்கிலும் இருக்கை வசதி, பாதுகாப்பு, உள்ளிட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந் நிலையில் சபரிமலை, வண்டிப்பெரியார், எருமேலி, வடசேரிக்கரை, கரிமலை, ராணி வனப்பகுதிகள், பம்பை ஆகியஇடங்களிலும் சபரிமலை கோயிலுக்கு எட்டு கிலோமீட்டர் சுற்றளவிலும் வரும் 14ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை பிச்சைஎடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications