ஜெயா, உம்மன் சாண்டி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் இடையே இன்று நடப்பதாக இருந்தபேச்சுவார்த்தை வருகிற சனிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவுடன்பேச்சு நடத்துவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று சென்னை வருவதாக இருந்தது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை சனிக்கிழமைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக முதல்வர்அலுவலகத்திலிருந்து கேரள அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேரள முதல்வரின் அலுவலகமும்ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தப்பேச்சுவார்த்தையில் கேரள முதல்வருடன், அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழில்துறைஅமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி ஆகியோரும் வரவுள்ளனர்.
முக்கியப் பிரச்சினைகள் தவிர, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியை விடுவிப்பது தொடர்பாகவும் ஜெயலலிதாவுடன், கேரள முதல்வர்பேசவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications