For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பங்களாவில் பதுங்கியிருந்த கொலைக் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் சிவகாசிபோலீஸார். போலீஸார் மற்றும் கொலைக் குற்றவாளிகள், அவர்களுக்கு அடையாளம் கொடுத்தவர்ஆகியோருக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி நகராட்சி உறுப்பினராக இருந்து வந்த பாஸ்கர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இவர்அதிமுகவைச் சேர்ந்தவர். இவரைக் கொன்ற குற்றவாளிகளில் 2 பேர் நாகர்கோவில் அருகே ஒரு பங்களாவில்பதுங்கியிருப்பதாக சிவகாசி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகாசி போலீஸார் இன்று அதிகாலை நாகர்கோவில் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பங்களாவீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் இருப்பவர்களை சரணடையுமாறு கூறினர்.

ஆனால் வீட்டின் உரிமையாளரான வளவன் என்பவர் போலீஸாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்து அவர்களை குத்தமுயன்றார். இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வளவன் காயமடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இடையே, வீட்டிற்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களையும்போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கருத்தப்பாண்டியன் என்பவர் மட்டும் சிக்கினார், இன்னொருவர் ஓடிவிட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வளவன், எதிர் தாக்குதலில் காயமடைந்த 3 போலீஸார் ஆகியோர் நாகர்கோவில்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X