மூன்றாவது அணி உருவாகாது: வைகோ
சேலம்:
வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவும், பாமகவும் இணைந்து மூன்றாவது அணி அமைக்கவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள்தவறானவை, அதற்கு வாய்ப்பே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அடுத்த தேர்தலில் பாமாகவுடன் இணைந்து மதிமுக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்பது கற்பனையிலும் நடக்காது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் தவிர்க்கமுடியாதது.
பழநி ரோப் கார் திட்டத்தை துவக்க சென்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் பணம் 16 லட்சம் ரூபாய் செலவழிக்கபட்டுள்ளது.அதிரடிபடையினருக்கு தமிழக அரசு பரிசு கொடுத்துள்ளதால் மற்ற போலீஸார் மன உளைச்சலில் உள்ளனர் என்றார்.
வீரப்பன் கொலையான இடத்தில் வைகோ
முன்னதாக வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோபார்வையிட்டார்.
பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மதிமுக ஆய்வுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றார். பின்பு தர்மபுரி செல்லும் வழியில் வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்ட செல்லியம்பட்டி தொழுநோய் மறுவாழ்வு இல்லம் அருகே வரும்போது காரிலிருந்து இறங்கிய வைகோசம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications