தர்மபுரி ஆர்.டி.ஓவிடம் வீரப்பன் தங்கை வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

வீரப்பன் கொலை தொடர்பாக அவனது தங்கை முனியம்மாள் தர்மபுரி ஆர்.டி.ஓவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

வீரப்பன் கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிஉள்ளிட்ட பொதுமக்கள் 9 பேர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

4-வது நாள் விசாரணைக்கு வீரப்பனின் தங்கை முனியம்மாள், அவரது மகன் முருகேசன் வீரப்பனின் அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள்,முத்துலட்சுயின் அண்ணன் செங்கோடனின் மனைவி மல்லிகா, அவரது தம்பி குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது முனியம்மாள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் விஜயக்குமாரும்நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துலட்சுமி பேட்டி:

இதற்கிடையே வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

என் மீது தொடரப்பட்டுள்ள கொலை வழக்கு, தடா வழக்கு, கணவரிடம் இருந்து பணம் பெற்றது போன்ற வழக்குகளை தமிழக, கர்நாடக அரசுகள்வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர் என் மீதுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+