ஜெவுக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு
சென்னை:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டு மழையில் நனையவைத்தார் பாஜக எம்எல்ஏ அரசன்.
சட்டசபையில் அரசன் பேசுகையில், வீரப்பனை ஒழித்த முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குசிறப்பாக உள்ளது. இதற்காகவும் முதல்வரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
இது ஆளுங்கட்சியினருக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியது. அவர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், அரசைப் பாராட்டி பாஜக உறுப்பினர் பேசுவது ஆச்சரியமாகஉள்ளது. இதை அவரது கட்சித் தலைவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, தான் உணர்ந்ததை தனது தலைவர்களுக்கும் அரசன் எடுத்துக் கூறுவார் என்றார்.
இதனால் அவையில் சிரிப்பொலி பரவியது.
அமைச்சர்கள் மாற்றமும் புத்தகமும்...
தொடர்ந்து பேசிய அரசன், அமைச்சர்களைத் தான் இந்த அரசு அடிக்கடி மாற்றிவிடுகிறது. யார் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றேதெரியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், அதற்குத் தான் பத்திரிக்கைகளைப் படிக்கணும் என்றபோது அவையில் சிரிப்பொலிகேட்டது.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பழனிச்சாமி, அமைச்சர்கள் மாற்றம் குறித்து அவ்வப்போது புத்தகம்போட்டால் நன்றாக இருக்கும் என்று பஞ்ச் வைத்தார்.












Click it and Unblock the Notifications