கொலையாளிகளின் அடையாள அணிவகுப்பு!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காட்டும் வகையில் விரைவில்அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளமந்தைவெளி ராதாகிருஷ்ணன், போலீஸ்காரர் கண்ணன், கணேஷ், மலைத்தேவன், சங்கரராமின் மனைவி, மகள் ஆகியோர் மூலம்அடையாளம் சொல்லுமாறு போலீசார் கூறுவர்.
இந்தக் கொலையில் கைதான அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு வைத்தேஅடையாள அணிவகுப்பும் நடக்கும் என்று தெரிகிறது.
சங்கரரமானைக் கொல்லச் சென்ற கும்பல் முதலில் வீட்டுக்குத் தான் சென்றனது. அவரது மனைவி, மகளிடம் அப்பா எங்கே என்றுகேட்டுள்ளது. இதனால் இந்தக் கும்பலை அவர்கள் பார்த்துள்ளனர்.
சங்கரராமனைக் கொலை செய்த இதே கும்பல் தான் மந்தைவெளி ராதாகிருஷ்ணனையும் மடத்தின் தூண்டுதலால் முன்பு ஒருமுறைதாக்கியது. இதனால் அவரும் இந்தக் கும்பலைப் பார்த்துள்ளார்.
சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கணேஷ் சங்கரராமன் வேலை பார்த்த கோவிலின் ஊழியராவார். இவர் தான் கொலை குறித்துபோலீசுக்கு தகவல் சொன்னவர்.ய
இந்த அணிவகுப்பை நீதித்துறை நடுவர் முன்னிலையில் போலீசார் நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications