Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயேந்திரர்: தற்கொலை செய்தவர் தலித் வாலிபர்

Subscribe to Oneindia Tamil

பல்லடம்:

Shanmugam

சங்கராச்சாரியாருக்காக கோஷம் போடும் சண்முகம்
சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு இந்து முன்னணித் தொண்டர் தலித்சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

நேற்று பல்லடத்தில் பாஜக சார்பில் தர்ணா நடந்தபோது அங்கு வந்து, சங்கராச்சாரியாரை வாழ்த்தி கோஷமிட்ட சண்முகம் என்றவாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் பூச்சி மருந்து குடித்துவிட்டு தர்ணாவுக்கு வந்தது தெரியவந்தது.

இந்த வாலிபரின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது:

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் குருவாய் ஏற்றும், மாற்றுச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாலும் மதித்தும்போற்றப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர் நடத்தப்படும் விதம் குறித்துஅறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

எங்கள் ஊரில் இந்து மதம் எப்படி தேய்ந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு இந்த கடிதம் மூலம் தெரிவிக்கவிரும்புகிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த 5 பேர் ஒரு அமைப்பில் சேர்ந்து கொண்டு பாலசுப்ரமணியம் தலைமையில் கிறிஸ்தவமதத்திற்கு மாறினர்.

Shanmugam
சரிந்து விழுந்து இறக்கும் சண்முகம்

பிறகு அப்பாவி மக்களை பண ஆசை காட்டி கட்டாயப்படுத்தி 15 குடும்பங்களை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குமாற்றினர்.

அரசால் தலித் மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை பெற்றுத் தருவோம் என்றும், கிறிஸ்தவ மதத்தில் வரும் சலுகைகளையும்

இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியும் அரசுச் சலுகைகளைப் பெற இந்து மதம் என்றே சான்றிதழ் பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மதப்படியே ஜெபம் செய்து, வீட்டு விசேஷங்களையும் நடத்தி, கிறிஸ்தவ பண்டிகைகளைக்கொண்டாடுகின்றனர்.

அரசு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கிருஸ்துவர்களாக மாறிய பின்னரும் அரசாங்கத்தில் தலித்களுக்கு தரப்படும்சலுகைகளை முழுமையாக பெற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மதம் மாறுபவர்களை, இந்து மதத்தின் பெருமைகளை விளக்கி மதம் மாறாமல் தடுத்து வந்தேன். இதனால்என்னையும் என் குடும்பத்தையும் ஒழிக்க சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள்.

ஒரு பெண்ணை வெட்ட முயன்றதாக என் மீது பொய்ப் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரிக்காமல் இரவோடு இரவாக என்னைஅழைத்துச் சென்று எப்.ஐ.ஆர். போட்டு கோவை சிறையில் அடைத்துவிட்டனர்.

ஒரு வாரம் கழித்து நான் ஜாமீனில் வெளிவந்தேன். ஒரு மாதமாக காவல்நிலையம் சென்று தினமும் கையெழுத்து போட்டுவருகிறேன். மேலும் நான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று என்னை வேலையில் சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

அதன் பின்பு வேலையில்லாமல் வீட்டில் இருந்தேன். எந்த தவறும் செய்யாமல் தற்போது எட்டு நாளுக்கு ஒரு முறை போலீஸ்தலைமை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வருகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+