அவதூறு வழக்கு: நீதின்றத்தில் ஸ்டாலின் ஆஜர்
செங்கல்பட்டு:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதுதொடர்பான வழக்கில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் திமுக துணைபொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று ஆஜரானார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டரசன்பேட்டை என்ற இடத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர்ஜெயலலிதா தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அவதூறாக இருந்ததாகக் கூறி அவர் மீது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அவர் ஆஜரானார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கண்ணகி கற்புக்கரசி என்று கூறியதற்காக என் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று கூறிய ஜெயலலிதா மீது என்ன வழக்குப் போடுவது? என்று கேட்டார்.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.