ஜெயேந்திரரை கிண்டலடிக்கும் சக கைதிகள்!
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை மற்ற கைதிகள் கிண்டலடித்து, கேலி செய்வதாக சங்கராச்சாரியாரின்வழக்கறிஞர்கள் புகார் கூறியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் தனி அறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இதே சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதான பலதரப்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சில கைதிகள், ஜெயேந்திரரை கிண்டலடித்து, கேலி செய்வதாக கூறப்படுகிறது. ஜெயேந்திரர் தனது அறையை விட்டுவெளியே வரும்போது அவரைப் பார்த்து கேலியாக சத்தம்போட்டுப் பேசுவதாகவும், அவரைப் பார்த்து கிண்டலாகசிரிப்பதாகவும் ஜெயேந்திரர் தரப்பு கூறியுள்ளது.
இதனால் தனது அறையை விட்டு வெளியிலேயே வராமல் சங்கராச்சாரியார் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறைக் கண்காணிப்பாளரிடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தடுக்கநடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சிறைக் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications