இந்தியாவில் பாக். பிரதமர்: மன்மோகனுடன் சந்திப்பு
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் அப்துல் அஜீஸ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்கைப் போலவே அஜீசும் ஒரு பொருளாதார நிபுணரே. நேற்று தனது மனைவி ருக்ஷானாவுடன் டெல்லி வந்தஅஜீஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருடனும் பேச்சு நடத்தினார்.
அத்வானியை பாகிஸ்தானுக்கு வருமாறும் அவர் அரசின் சார்பில் அழைப்பு விடுத்தார். காஷ்மீரில் படைக் குறைப்பு உள்ளிட்டபல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் அஜீசின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் அவரை பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் சந்தித்துப் பேசினார். ஈரானியில் இருந்து பாகிஸ்தான்வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு வரும் திட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்த எரிவாயுக் குழாயை தனது நாட்டின் வழியாகச் செல்ல அனுமதித்தால் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர்வரை ராயல்டி வருமானம் வரும் என்பதை அய்யர் அஜீசிடம் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக இந்தியாவின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களுடன் பேசி அஜீஸ், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்பால் நமது இரு நாட்டுஉறவுகள் வளர வேண்டும் என்றார்.
பின்னர் டெல்லியில் உள்ள பிரபர சூபி குரு ஹஜ்ரத் நிஜாமூதீன் அவுலியாவின் தர்ஹாவிலும் அஜீசும் அவரது மனைவியும்வழிபாடு நடத்தினார்.












Click it and Unblock the Notifications