For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. 29ம் தேதி டெல்லி பயணம்: பிரதமரை சந்திப்பார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா நாளை மறுதினம் டெல்லி செல்கிறாார்.

30ம் தேதி நடக்கும் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 29ம் தேதி இரவு அவர் டெல்லி செல்கிறார்.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்வருடன் நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சப் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

திட்டக் குக் கூட்டம் முடிந்த பின் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது ஜெயேந்திரர்விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா நேரில் விளக்கம் தருவார் என தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் ஜெயலலிதா தங்கும் தமிழ்நாடு இல்லத்தின் வெளியே இந்து அமைப்புக்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால், அங்குபாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X