மீண்டும் மழை: குளிந்தது சென்னை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கும், தென்காசிக்கும் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பொதிகை எக்ஸ்பிரஸ் எனமாற்றப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தவித்துப் போன சென்னை நகரில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லை. மீண்டும் கடும் வெயில்வீசி வந்தது.
இந் நிலையில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இதனால் சென்னை நகர் குளுமையடைந்தது. 4மணியளவில் பெய்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. புறநகர்ப் பகுதிகளில் இரவில் லேசான மழைபெய்தது.
சென்னை தவிர்த்த வட தமிழகத்தின் பிற பகுதிகளில் இரவு முழுவதுமே லேசான மழை பெய்தது.
இதற்கிடையே, கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் வெகு வேகமாகசென்னைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று இரவு அந்த நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கண்டலேறு அணையிலிருந்து 660 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications