அனுராதாவை மடத்துக்கு அழைத்து சென்ற மைதிலி!
சென்னை:
எழுத்தாளர் அனுராதா ரமணனை சங்கராச்சாரியாரிடம் கூட்டிச் சென்றது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மைதிலி ராகவன் தான்என்று தெரிய வருகிறது.
அவ்வப்போது சினிமாவில் துக்கடா ரோல்களில் நடித்து வரும் மைதிலி தான் அனுராதாவை அழைத்துக் கொண்டு மடத்துக்குச்சென்றுள்ளார்.
அங்கு மைதிலியும் ஜெயேந்திரரும் அருகருகே நெருங்கி உட்கார்ந்து செய்த செய்கையைக் கண்டு அனுராதா அதிர்ந்துபோயுள்ளார். அதன் பின்னர் தான் அனுராதாவிடமும் தகாக வார்த்தைகளைப் பேசிக் கொண்டு கையைப் பிடித்துள்ளார்ஜெயேந்திரர்.
மைதிலுக்கு சங்கர மடத்தில் பெரும் செல்வாக்கு இருந்து வந்துள்ளது. நினைத்த நேரத்தில் ஜெயேந்திரரை சந்திக்கும் அளவுக்குநெருக்கம்.
சென்னை பெசன்ட் ரோடு சாரதி கோவில் அருகே வசிக்கும் மைதிலி, முன்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மாநில காங்கிரஸ்தலைவராக இருந்தபோது அவருடன் மிக நெருக்கமாக இருந்தார். ஆனாலும் கட்சியில் சீட் ஏதும் வாங்கிக் கொடுக்காமல் கடைசிவரை மைதிலியை டபாய்த்துவிட்டார் அந்தப் பிரமுகர்.
இப்போது மைதிலி ராகவனிடம் போலீஸ் விசாரணை ஆரம்பித்துள்ளது. எந்தெந்த பெண்களை எல்லாம் சங்கர மடத்துக்குதவறான காரணங்களுக்காக அழைத்துப் போனார் என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.
விசாரணையில் அவர் குறிப்பிட்டுள்ள சில பெயர்கள் போலீசாரையே தலை சுற்ற வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். விரைவில்இந்தப் பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறுகின்றனர்.
ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்த சியாமளாவுக்கும் ஜெயேந்திரருக்கும் தவறான உறவு இருந்ததாகவும் போலீசார் சொல்லஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர ஸ்ரீமயமான நடிகை, சுகந்த மணம் வீசும் நடிகை, மால் நடிகை என பலரது பெயர்களும் மடத்தின் இருட்டுப்பக்கங்களுடன் இணைத்துச் சொல்லப்படுகின்றன.
நடிகைகள், பெண்கள் விஷயத்தில் கணவரிடமிருந்து பிரிந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் என்று பார்த்து வலைவீசப்பட்டுள்ளது என்கிறார்கள்.
வரும் தகவல்களைக் கேட்டால் காது கூசுகிறு..












Click it and Unblock the Notifications