கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல்
டாக்கா :
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு அந் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்றுமிரட்டல் விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க நாளை மறுநாள் வங்கதேசம்செல்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அர்கத் - அல் - ஜிகாத் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. டாக்காவில் உள்ளஇந்தியத் தூதரகத்திற்கு அந்த அமைப்பு எழுதிய கடித்தத்தில், இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசசம் வந்தால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று கூறியுள்ளது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அந்நாட்டுஉள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.