For Daily Alerts
Just In
அப்பு குறித்து வேலூர் சிறையில் விசாரணை
வேலூர்:
வேலூர் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அப்பு முன்பு அடைக்கப்பட்டிருந்தது குறித்து காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்பு என்ற கிருஷ்ணசாமி முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்கவும், சிறையில் அவரது நடத்தைகள் குறித்து விசாரிக்கவும் வேலூர் மத்திய சிறைக்கு காஞ்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர்பட்டாபிராமன் தலைமையில் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வந்தனர்.
விசாரணைக்கு வந்த அவர்கள் ஜெயேந்திரரை சந்தித்தார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
Story first published: Monday, December 6, 2004, 5:30 [IST]