துரைமுருகனுக்கு நீதிபதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு வேலூர் குற்றவியல் நீதிபதிகடும் கண்டனம் தெரிவித்தார்.

துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ. 3 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் குற்றப் பத்திரிக்கையின் நகல்கள் இன்னும் துரைருகன்உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நகலைப் பெற துரைமுருகன் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பதே இதற்குக் காரணம்.

இந் நிலையில் இன்று மீண்டும் அனைவரும் மொத்தமாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராஜகோபால் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.ஆனால் துரைமுருகன் மட்டும் வரவில்லை. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக நீதிபதியிடம் துரைமுருகனின் வழக்கறிஞர்தெரிவித்தார்.

இதை அரசு வழக்கறிஞர் மிகக் கடுமையாக ஆட்சேபித்தார். இதோடு 8 முறை துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விட்டது.இதுவரை அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் துரைமுருகன் கோர்ட்டுக்கு வராமல்உள்ளார் என்றார்.

இதையடுத்து துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம்அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+