For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவின் தமிழிசைப் பெருவிழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாமக நிறுவனர் ராமதாஸ் நிறுவியுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் 8,9 மற்றும் 10 ஆகியதேதிகளில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா நடைபெறுகிறது.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரை,திருநெல்வேலி, கோவை, சீர்காழி, வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் பண்ணிசைப் பெருவிழா தலா 2 நாட்கள் நடந்தது.

தமிழிசை பாடல்கள் குறித்த ஆய்வரங்கம், இசையரங்கம் ஆகியவை அதில் இடம் பெற்றன. சென்னையில் நிறைவுப் பெருவிழாநடைபெறவுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழிசை சங்கத்தின் தலைவருமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவை தொடங்கிவைக்கிறார்.

திருவருட்பா- திவ்விய பிரபந்தம்:

8ம் தேதி சங்கத தமிழ் மற்றும் சிலப்பதிகாரப் பாடல்கள், திவ்வியப் பிரபந்தம், கோபாலகிருஷ்ணன் பாரதியார், மாயூர் வேதநாயகம்பிள்ளை பாடல்கள், திருவருட்பா, தேவாரம், திருவாசகம், சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் ஆகியவை குறித்த ஆய்வரங்கம்,இசையரங்கம் நடக்கும்.

பட்டினத்தார் பாடல்கள்:

9ம் தேதி திருவாய் மொழி, ஆண்டாள் பாடல்கள், இஸ்லாமிய இசைப் பாடல்கள், சித்தர் பாடல்கள் குறித்தும், 19ம் நூற்றாண்டு தமிழிசைப்பாடல்கள், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், காவடிச் சிந்து, கிறிஸ்தவ இசைப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்உள்ளிட்டவை குறித்து ஆய்வரங்கும், இசையரங்கும் நடைபெறும்.

திருப்பல்லாண்டு:

10ம் தேதி தண்டபாணி தேசிகர் பாடல்கள், காரைக்கால் அம்மையார், சேக்கிழார் பாடல்கள், திருப்புகழ், குறவஞ்சி, பிள்ளைத் தமிழ்,திருக்குறள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு தமிழிசைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த ஆய்வரங்கும், இசையரங்கும்நடத்தப்படும்.

இந்த இசையரங்கு, ஆய்வரங்குகளில் முன்னணி தமிழிசைக் கலைஞர்கள், அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். நிறைவாக அறக்கட்டளைநிறுவனர் ராமதாஸ் உரையாற்றுகிறார் என்று கூறியுள்ளார் ஜி.கே.மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X