ஆடிட்டர் வழக்கு: மேலும் 6 பேர் ஜாமீன் கோரி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Radha Krishnanஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள 6 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சங்கர மடத்தின் முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த2002ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது.

இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் பின்னர் குணமடைந்தனர். சோமசேகர கனபாடிகள் என்றபெயரில் ஜெயேந்திரருக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய காரணத்தால்தான் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகக்கூறப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயேந்திரர் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். மேலும் சிலரும் இதில் கைது செய்யப்பட்டனர். இந்தவழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனு மீதான தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படவுள்ளது.

இந் நிலையில், ராதாகிருஷ்ணன் வழக்கில் கைதாகியுள்ள சுந்தர், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், அனந்தன்,சின்னா ஆகியோர் இன்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.

இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே போலீஸார் எங்களை வழக்கில்சேர்த்துள்ளதாக தங்களது மனுவில் 6 பேரும் கூறியுள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+