கலாமிடம் அறிக்கை: பாஜக கூட்டணி முடிவு
டெல்லி:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை தமிழக அரசு நடத்தும் முறைகள் குறித்து நேரில் ஆராய்ந்து, அது குறித்து குடியரசுத் தலைவர்அப்துல் கலாமிடம் அறிக்கை அளிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
சிறையில் ஜெயேந்திரரை சந்திக்க பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அடங்கிய குழு இந்த வாரம்வேலூர் வருகிறது. சிறையில் ஜெயேந்திரரை தமிழக அரசு நடத்தும் முறை, மனித உரிமைகள் மீறப்படுகிறதா, முறையான மருத்துசிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்துகிறது.
ஜெயேந்திரரின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து கலாமிடம் அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக முடிவெடுத்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் இன்னமும் அக் கட்சி கலந்துஆலோசிக்கவில்லை. பாஜக மக்களவைத் துணைத் தலைவர் மல்கோத்ரா கூறுகையில், கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் டெல்லி வந்ததும் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
குழுவில் 4 அல்லது 5 பேர் இடம் பெறுவார்கள். ஜெயேந்திரர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் தினமும் குரல் எழுப்புவோம்.பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து தக்க பதில் வரும்வரை இதைத் தொடர்வோம் என்று தெரிவித்தார்.
ஜெயேந்திரரை உமா பாரதி சந்தித்தது பாஜக சார்பிலா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.