அரசு ஊழியர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு
விழுப்புரம்:
பொங்கல் தினத்துக்குள் பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்கக் கோரி 3 நாட்கள்ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரத்தில் அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசின் நிதி நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். எனவே வருகிற பொங்கல்தினத்துக்குள் பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் அரசு ஊழியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
அதேபோல சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஜனவரி 5ம் தேதி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப்பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications