For Daily Alerts
Just In
ரயில்-வேன் மோதல்: இறந்தவர் குடும்பங்களுக்கு ஜெ. உதவி
சென்னை:
விழுப்புரம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலும், வேனும் மோதிய விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவியை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்த செய்தியையும், 10 பேர் பலத்த காயமடைந்தனர் என்றசெய்தியையும் கேட்டு துயருற்றேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலாரூ. 15,000 உதவி அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, December 16, 2004, 5:30 [IST]