வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரித்த ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
உச்ச நீதிமன்றத்தில் இன்றைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை குறித்து தனது வழக்கறிஞர்கிருஷ்ணசாமியிடம் ஜெயேந்திரர் கேட்டறிந்தார்.
ஜெயேந்திரரை கிருஷ்ணசாமி வேலூர் சிறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயேந்திரர் நலமுடன் இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள ஜாமீன் மனுக்கள் குறித்து அவர் விவரம் கேட்டறிந்தார்.
சங்கர மடத்தில் மார்கழி மாத பூஜைகள் தொடங்கியாயிற்றா என்றும் கேட்டார். அவரும் தற்போது மார்கழி மாத பூஜைகளை சிறையிலேயேமேற்கொண்டுள்ளார் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications