சுந்தரேச அய்யருக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
ஜெயேந்திரரை சந்திக்கச் சென்ற சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பலரும் சந்தித்துப்பார்த்து வருகிறார்கள்.
இந் நிலையில் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், வாரணாசி சங்கர மட மேலாளர் மணி மற்றும் மட உதவியாளர் ஈச்சங்குடி மெளலிஆகியோர் இன்று ஜெயேந்திரரை சந்திக்க விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் அவர்களது விண்ணப்பத்தை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எதற்காக இவர்களது விண்ணப்பம் நிராகக்கப்பட்டது என்றுதெரியவில்லை.












Click it and Unblock the Notifications