துபாய்: 2 தமிழக தொழிலாளர்கள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாயில் கடந்த இரு வாரங்களில் இரு தமிழர்கள் உட்பட 3 இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ஆறுமுகம் வெங்கடேசன் என்ற தமிழர் சம்பள பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் செல்வக்குமார் (25) என்பவரும் அறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்சென்னையைச் சேர்ந்தவர்.

செல்வக்குமார் தற்கொலை குறித்து அவருடன் வசித்து வந்த பாபு கூறுகையில், குமார் ஒரு வருடத்திற்கு முன்பு கட்டடத் தொழிலாளியாகதுபாய் வந்தார். மிகவும் நல்ல மனிதர். மிக அன்பானவர்.

8 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் குமாரின் சகோதரி தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.அதிலிருந்து குமார் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தார். யாருடனும் பேசுவதில்லை. தனிமையிலேயே இருந்து வந்தார்.

இந் நிலையில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வேலை பார்த்தநிறுவனத்துடன் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

இதே போல தாமஸ் அண்டனி (30) என்ற அக்கவுண்டன்ட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதினத்தன்று இந்தியா திரும்புவதாக இருந்தது. இருவரும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+