செய்தி சுதந்திரத்துக்கு எதிரான பிரிவு: த ஹிண்டு வழக்கு
டெல்லி:
பத்திரிக்கைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகளைத் தொடர வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவுக்கு எதிராகஇந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ரவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சட்டசபையின் உரிமையை மீறி செய்தி வெளியிட்டதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி சபாநாயகர் காளிமுத்து, இந்து ஆங்கிலநாளிதழின் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர்கள், பதிப்பாளர், முரசொலி ஆசிரியர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து இந்து நாளிதழ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்தது. மேலும் தனது மனுவில் சட்டமன்றத்தின் அதிகார வரம்புகள் குறித்த அரசியல் சட்ட கேள்விகளை இந்துகிளப்பியது.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 10ம் தேதி 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டு விரிவாகவிசாரிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இந்து நாழிதள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தாக்கல் செய்து மூத்தவழக்கறிஞர் ஹரீஸ் சால்வே பேசுகையில்,
அன்றாட செய்திகளை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை பத்திரிக்கைகளுக்கு இருக்கிறது. ஆனால் இந்த பொது நலமுயற்சிக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவு இடையூறாக உள்ளது என்றார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சபர்வால், நீதிபதி தர்மாதிகாரி ஆகியோர் கூறுகையில்,
பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரம் நியாயமமானது தான். ஆனால், சமீபத்தில் நடிகை கரீனா கபூர் தொடர்பாக பத்திரிக்கைகளிலும்டிவியிலும் வெளியான படங்களும், வீடியோவும் எந்த வகையில் மக்களுக்கு நல்லதைச் செய்யும்? என்று நீதிபதிகள் கேட்டனர்.
(கரீனாவும், அவரை விட மிக இளைய நடிகரான சொகைல் கானும் மிக இன்டிமேட்டாக மெளத் கிஸ் கொடுத்துக் கொண்ட காட்சியையாரோ வீடியோவாக எடுத்துத் தர அதை மிட்-டே நாளிதழும் தனியார் தொலைக் காட்சிகளும் வெளியிட்டன).
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மீடியா எதை வேண்டுமானலும் செய்யவது சரியல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில் இந்தமனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் அறிவித்தனர்.