For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்டாசு விபத்து: ஜெ. நிவாரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஞ்சிபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் நகரில் 16ம் தேதியன்று தனியார் ஒருவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபட்டாசு செய்யும் மூலப் பொருட்கள் மற்றும் பட்டாசு வெடித்ததில் நாராயணன், முருகன், உதயராஜ், ரமேஷ் ஆகிய 4 பேர் பலியான தகவல்கேட்டு துன்புற்றேன்.

வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரையும் பூரண குணம் அடைய வேண்டுமென்ற எனதுவிருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும்வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அவர்.

பலி 5 ஆக உயர்வு:

இதற்கிடையே இந்த விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலைஉயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X