For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏப். 23, 24-ல் நுழைவு தேர்வு
சென்னை:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது.
தேர்வுகள் பிளஸ் டூ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். தேர்வு எழுத 41 நகரங்களில் உள்ள 56 இணையதள மையங்கள்மூலமாகவும், தபால் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். தபால் மூலம் பதிவு செய்ய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம்.
தேர்வு அட்டவணை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு: ஏப்ரல் 23 மற்றும் 24
எம்.பி.ஏ.: மே 21ம் தேதி -காலை 10 மணி முதல் பகல் 12 வரை
எம்.சி.ஏ.: மே 21ம் தேதி -பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 வரை
எம்.இ., எம்.டெக்.: மே 22ம் தேதி -காலை 10 மணி முதல் பகல் 12 வரை
இத் தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
Comments
Story first published: Saturday, December 18, 2004, 5:30 [IST]