ரவி சுப்பிரமணியத்தின் ஊழியைகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் குறித்து அவரது ரியல் எஸ்டேட் அலுவலக பெண் ஊழியர்கள் 3 பேரிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ரவி சுப்பிரமணியம் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வரும் அவரைப்பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ரவி சுப்பிரமணியம் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக பலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் ரவி சுப்பிரணியம்நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றும் 3 பெண்களிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.காஞ்சிபுரத்தில் உள்ள காட்டுப் பங்களாவில் வைத்து இந்த விசாரணை நடந்தது.












Click it and Unblock the Notifications