ரூ. 9.5 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கேரளாவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக வெளிநாட்டுக்கு ரூ. 9.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தமுயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குஇடமான முறையில் வந்த காரைப் போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் பயணித்த அப்துல் பஷீர், முஸ்தபா இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்துஅவர்கள் வைத்திருந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் ஹெராயின் போதைப் பொருள்இருந்தது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 9.5 கோடியாகும். இருவரையும் கைது செய்த போலீஸார் காரையும் பறிமுதல்செய்தனர்.












Click it and Unblock the Notifications