அப்புவிடம் 2வது நாளாக போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவிடம் நேற்று நள்ளிரவு வரை போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணை ஆரம்பித்துவிட்டது.
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையின் தலைவன் அப்பு போலீஸ் வசம் சிக்கியுள்ளான். அவனை 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கூறியதால் 3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிஉத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பங்களாவுக்கு அப்பு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு வைத்து அவனிடம் நேற்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்கியது.
நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்தது. எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் உள்ளிட்டஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இரவு 1 மணிக்கு தூங்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட அப்புவிடம் காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணைதொடங்கிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்துவருகிறது.
ஆற்காடு, அண்ணாநகர் ரமேஷ்:
சங்கர மடத்துடனான தொடர்புகள், ரவி சுப்ரமணியத்துடனான தொடர்புகள், இவன் நடத்தியுள்ள மொத்தகொலைகள், இவனது கட்டுப்பாட்டில் உள்ள கூலிப் படைகள், மாஜி திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடனானதொடர்பு, அண்ணாநகர் ரமேஷ் மர்மச் சாவு ஆகிய விவகாரங்கள் குறித்து அப்புவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications