அப்புவிடம் 2வது நாளாக போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவிடம் நேற்று நள்ளிரவு வரை போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணை ஆரம்பித்துவிட்டது.
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையின் தலைவன் அப்பு போலீஸ் வசம் சிக்கியுள்ளான். அவனை 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கூறியதால் 3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிஉத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பங்களாவுக்கு அப்பு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு வைத்து அவனிடம் நேற்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்கியது.
நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்தது. எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் உள்ளிட்டஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இரவு 1 மணிக்கு தூங்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட அப்புவிடம் காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணைதொடங்கிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்துவருகிறது.
ஆற்காடு, அண்ணாநகர் ரமேஷ்:
சங்கர மடத்துடனான தொடர்புகள், ரவி சுப்ரமணியத்துடனான தொடர்புகள், இவன் நடத்தியுள்ள மொத்தகொலைகள், இவனது கட்டுப்பாட்டில் உள்ள கூலிப் படைகள், மாஜி திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடனானதொடர்பு, அண்ணாநகர் ரமேஷ் மர்மச் சாவு ஆகிய விவகாரங்கள் குறித்து அப்புவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications