அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பலர் மீண்டும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளராக இருந்த விஜயகுமார், சென்னை உணவுவழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (தலைமையிடம்) துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப் பதவியில் இதுவரை இருந்த சகாயம், சென்னை வடக்கு உணவு வழங்கல் துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டிணம் துணை ஆட்சியராக இருந்த உமாபதி. தற்போது அரசு நிதித் துறை சார்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மறுவாழ்வு துறை சிறப்பு மற்றும் துணை இயக்குனராக பதவி வகித்த வைத்தியநாதன் ஓய்வு பெற்றதையடுத்துஇப்பதவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய முத்துராமு, சென்னை உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்த உத்திரகுமாரன் ஐஏஎஸ், அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
சென்னை கலால் துணைக் கமிஷனராகப் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, சென்னை (லேண்டு டிரிபியூனல்) மாவட்ட வருவாய்அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி வகித்த ராஜகோபாலன் ஓய்வு பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய வள்ளலார் சென்னை தமிழ்நாடு சிமென்ட் கழகத்தில் பொதுமேலாளராக (மார்க்கெட்டிங்) நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications