ஜெயேந்திரர் காவல் மேலும் 15 நாள் நீட்டிப்பு
சென்னை & செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரரின் சிறைக்காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் முதல் குற்றவாளியான ஜெயேந்திரரின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரது சிறைக் காவலை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
காஞ்சி சிறையில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால் நீதிபதி உத்தமராஜன் செங்கல்பட்டுக்கு வந்தார். அங்குள்ளநீதிமன்றத்தில் இருந்தபடியே வேலூர் சிறையில் இருக்கும் ஜெயேந்திரருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பின்னர்சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
சைதாப்பேட்டையில்..
இதே போல சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரரின்நீதிமன்றக் காவல் ஜனவரி 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை 23வது நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி வீடியோ கான்பரன்சிங் மூலம் சங்கராச்சாரியாருடன்பேசிய பின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
கடந்த முறையும் வீடியோ கான்பரன்சிங் மூலமே ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.