For Daily Alerts
Just In
80 பெண் போலீஸார் இடமாற்றம்
மதுரை:
மதுரை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த 80 பெண் போலீஸார் மாநகர காவல் நிலையங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் 300க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்ளனர். இவர்களில் 80போலீஸாரை மாநகரக் காவலுக்கு மாற்றி மதுரை கமிஷ்னர் விஜயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நகர காவல் நிலையங்களில் பெண் போலீஸார் பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆயுதப் படைப் பிரிவில்உள்ள இந்தப் பெண் போலீஸார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டாலும் கூட இவர்கள் ஆயுதப் படை காவலர்களாகவே கருதப்படுவார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, December 23, 2004, 5:30 [IST]