ராணி மேரி கல்லூரியை கடல் நீர் சூழ்ந்தது!
சென்னை:
சென்னையில் இன்று காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில்கடல் நீர் சூழ்ந்துள்ளது. 20 பேர் வரை அதிர்ச்சி காரணமாக மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியில் சிலர் இறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இன்று காலை சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துகடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
நில நடுக்க அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் கடல் கொந்தளிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.குறிப்பாக மெரீனா கடற்கரை பகுதி முழுவதும் கடல் நீர் புகுந்துள்ளது. அதிலும் ராணி மேரிக் கல்லூரி,விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் சூழ்ந்துள்ளது.
மெரீனா கடற்கரை மணல் பரப்பையே பார்க்க முடியாத அளவுக்கு கடல் நீர் புகுந்துள்ளது. அரை மணிக்குஒருமுறை கடல் நீர் ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்து வருவதால் திருவல்லிக்கேணி, திருவான்மியூர்,சாந்தோம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
கடலோரக் காவல்படையினர் அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடலுக்குள் யாராவதுஇழுத்துச் செல்லப்பட்டால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் இயக்கப்படுகின்றன.
கடலோரத்தில் உள்ள மீனவர் குப்பங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். அவர்களில் பலர் கடல் நீர் உள்ளே புகுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர், சிலர் இறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மெரீனா கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications