ராயப்பேட்டை மருத்துவமனையில் 60 உடல்கள்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சென்னையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு இறந்தவர்களில் 60 பேர் உடல்கள் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றம் நிலவுகிறது. அவ்வப்போது பெரும் அலைகள்கரையைத் தாண்டி வந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பட்டினப்பாக்கம், சாந்தோம், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம்,பாலவாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுராயப்பேட்டை மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பில் நீரில் மூழ்கி மூர்ச்சையான சுமார் 50க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.எஸ். மருத்துவமனை,கல்யாணி மருத்துவமனை, சந்தோஷ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications