தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் சுனில் தத் பாராட்டு
பாண்டிச்சேரி:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஓராண்டுக்கு மானிய விலையில் டீஸல் வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப் போவதாகமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் சுனில் தத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றன.பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவியுடன் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து பாதுகாக்க தமிழக அரசுதிட்டமிட்டிருப்பதைப் பாராட்டுகிறேன்.
புதுவையில் படகுகள், மீன்பிடி வலைகளை இழந்தவர்களுக்கு அவற்றை வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்திருப்பதும்பாராட்டிற்குரியது.
எங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவகேந்திராவைச் சேர்ந்த 5 லட்சம் இளைஞர் மன்றங்களும் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுனாமியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை அரசு கேட்டுக் கொண்டால் எங்களது அமைச்சகத்தின் மூலம் அவர்களுக்குகவுன்சிலிங் அளிக்க தயாராக இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு ஓராண்டுக்கு மானிய விலையில் டீஸல் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைசெய்யவிருக்கிறேன் என்று கூறினார்.